சீரமைப்பு பணிகள் நிறைவு..! எழும்பூரில் புறநகர் ரெயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயக்கம்

புறநகர் மின்​சார ரெயில் சேவை வருகிற 5-ந்தேதி முதல் தொடங்​கும் என்று ரெயில்வே அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.
சீரமைப்பு பணிகள் நிறைவு..! எழும்பூரில் புறநகர் ரெயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயக்கம்
Published on

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால், புறநகர் ரெயில் சேவை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தில் ரூ.735 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி​கள் முழு​வீச்​சில் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகு​தி​யாக, பிர​மாண்ட நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி நடந்து வந்தது. இதற்கு அடித்​தளம் அமைக்​கும் பணி காரண​மாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன.

இதனால், கடற்​கரை - தாம்​பரம் - செங்கல்பட்டு வழித்தடத்​தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி முதல் 44 மின்​சார ரெயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 10, 11-க்கு பதிலாக, 5, 6-வது நடைமேடைகளில் புறநகர் மின்​சார ரெயில்​கள் இயக்​கப்​பட்டு வந்தன.

வழக்​க​மான ரெயில் சேவை குறைக்​கப்​பட்​டு தற்​காலிக கால அட்​ட​வணைப்​படி 20 நிமிடங்​களுக்கு ஒரு மின்​சார ரெயில் இயக்​கப்படு​கிறது. இது மட்​டுமின்​றி, இரு மார்க்​கத்​தி​லும் எழும்​பூர் நோக்​கிச் செல்​லும்​போது ரெயில்​கள் தாமத​மாக இயக்கப்படுகின்றன. மேலும் எழும்​பூர், சென்ட்​ரலுக்கு உரிய நேரத்​தில் செல்ல முடி​யாமல் விரைவு ரெயில்​களை தவற​விடும் நிலை​யும் ஏற்​படு​கிறது. இதனால், பயணி​கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

எழும்​பூர் ரெயில் நிலை​யத்​தின் 10, 11-வது நடைமேடைகளில் இருந்து வழக்​க​மான புறநகர் மின்​சார ரெயில் சேவை வருகிற 5-ந்தேதி முதல் தொடங்​கும் என்று ரெயில்வே அதிகாரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், சென்னை எழும்பூர் ரெயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவு பெற்றுள்ளதால், புறநகர் ரெயில் சேவை இன்று முதலே வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பழைய அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவை இயங்​கத் தொடங்​கும் என தெரிவித்துள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com