தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதலமைச்சருக்கு ஆதரவு- அண்ணாமலை

திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.
தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதலமைச்சருக்கு ஆதரவு- அண்ணாமலை
Published on

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கூட்டணி குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை இறுதி முடிவாக எடுத்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 4-ல் ஒருவர் தான் முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவில் தொண்டராக பணியாற்றிக் கூட தயாராக இருக்கிறேன்.

தொண்டராக இருக்கிறேன் என்பதன் கருத்தை நீங்கள் புரி்நது கொள்ளுங்கள். பாஜகவின் வளர்ச்சியே முக்கியம், என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியமல்ல. என்னுடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொண்டிருக்கிறேன். ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகிறார்.

காங்கிரஸ் போல டெல்லியில் அமர்ந்து கொண்டு தமிழக அரசியலை பாஜக கட்டுப்படுத்தாது. 

விஜய்க்கான பாதுகாப்பு வேறு, அரசியல் என்பது வேறு. விஜய், செங்கோட்டையனுக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை.

'Y' பிரிவு பாதுகாப்பு- பாஜகவுக்கு, விஜய், செங்கோட்டையனுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com