வடகிழக்கு பருவ மழை தொடங்கியது: பூண்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு

சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியது: பூண்டி ஏரியில் கலெக்டர் ஆய்வு
Published on

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூண்டி ஏரி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி கேட்டறிந்தார். முன்னதாக அவர் பூண்டி ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சத்ய நாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com