என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன்
- சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
- நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவிருக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற தமிழக பா.ஜ.க. சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
நமது பண்பாட்டையும், அனைவருக்குமான சமூகநீதியையும் வென்றெடுக்க இம்மாநாடு வழிவகுக்கட்டும் எனப் பெருமதிப்பிற்குரிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்கும், மாநாட்டுக் குழுத்தலைவர் எனது அன்பிற்குரிய அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என்று கூறியுள்ளார்.
Next Story






