

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக மிகப் பெரிய இயக்கம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தவெகவிற்கு எந்த சூழலிலும் ஆதரவு அளிக்காது என்பதை இபிஎஸ் அனுமதியுடன் கூறுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கவில்லை என தெரிவித்தார்.