

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன்.
* பேரறிஞர் அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர் ஈரோடு.
* திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
* திமுக ஆட்சியில் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
* திமுக ஆட்சியின் சாதனை திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள்.
* மகளிர் மேம்பாட்டுக்காக பார்த்து பார்த்து திமுக அரசு திட்டங்களை செய்துள்ளது.
* செல்லும் இடமெல்லாம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து என்னை மகளிர் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.