என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும்- அமைச்சர் தகவல்
    X

    புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும்- அமைச்சர் தகவல்

    • புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும்.
    • விரைவில் வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    சென்னை:

    சட்டசபையில் எழிலரசன் (தி.மு.க.) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பற்றி கேட்ட கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-

    புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறார்கள்.

    இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு பணியாளர்கள் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாகும். இருந்தாலும் இந்த திட்டத்திற்கு உரிய செயலாக்கத்தை, வழிகாட்டுதல்களை, விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை.

    விரைவில் அந்த வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளும் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். அது வெளியானவுடன் நம் மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவினை முதலமைச்சர் ஆலோசனை பெற்று அமைத்து அந்த குழுவின் வழிகாட்டுதலின் படி அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×