கள ஆய்வில் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கு தனது மண்டபத்தை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள். அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
கள ஆய்வில் கல்லூரி மாணவிகள் தங்குவதற்கு தனது மண்டபத்தை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் என்ன பயிர் பயிரிடப்படுகிறது, அதனை பராமரிக்க என்ன முறைகளை விவசாயிகள் கையாள்கிறார்கள் என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்காக 192 மாணவிகள் மற்றும் 8 பேராசிரியர்கள் உள்ளடங்கிய குழு காரியாபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று வந்தனர். ஆனால் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளனர். இதனால் அவர்களது ஆய்வு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவியர்களின் சிரமம் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சுழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தன்னுடைய மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தை மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கினார்.

மேலும், வருகின்ற 20ஆம் தேதி வரை மாணவியர் தங்குவதற்கு ஏதுவான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனிடையே, மாணவியரை நேரில் சந்தித்த அமைச்சர் அவர்களுடன் உரையாடி அனைத்து வசதிகளும் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com