LIVE | 286 நாட்களுக்கு பிறகு கரூரில் முதலமைச்சர் விஜய்..!

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி.
TN CM Vijay to Karur

முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபார்கள், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கை கொடுத்த வரவேற்றனர்.

கரூரில் தனியார் கல்லூரி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் செல்லும் நிலையில் இருபுறமும் வழிநெடுகிலும் திரண்டு மக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற ஊடகத்தினர் போலீஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சி நடைபெறும் பிரதான அரங்குக்கு வெளியே உள்ள சிறிய அரங்கில் அமர காவல்துறை கட்டாயப்படுத்துகிறது.

செய்தி சேகரிக்க காவல் துறை சார்பில் செய்தியாளர், விரிவாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல். இதனால், செய்தியாளர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கருப்பு நிற உடையில்..

கரூர் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருச்சி வி்மான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட முதலமைச்சர் விஜய் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் உடை அணிந்திருந்தார்.

புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல்

கரூர் மனவாசி ஊராட்சியில் ரூ.1700 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

QR குறியீடு உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் 5000 பேருக்கு மட்டுமே கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் அனுமதி.

முதல்வரின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வருவோரின் வாகனங்கள் அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே பார்க்கிங்கில் அனுமதிக்கப்படுகிறது.

அனுமதித் சீட்டு இன்றி கார்களிலோ அல்லது பைக்கிலோ வருவோரை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை வழியாக கரூருக்கு புறப்பட்டார்.

கரூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 32 பேருக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வகையில் இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் விஜய்..

முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ரோடு-ஷோ செல்ல உள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை கரூர்-கோவை சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு சாலை ஓரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் விஜயை காண காலையில் இருந்தே அட்லஸ் மைதானத்தில் மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com