

ராணிப்பேட்டையில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் பயத்தில் இருப்பதாக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்னாமலை கூறுயிருக்கிறார். நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றுதான் அவர் தேர்தலிலேயே நிற்கவில்லை.
தி.மு.க. தெளிவாக உள்ளது. நிச்சயமாக வெற்றி எங்களுக்குத் தான் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்குத்தான் தேர்தல் பயம் வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.