இந்தியா- இங்கிலாந்து டி20 கிரிக்கெட்: சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவையில் மாற்றம்

மூன்று ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்பட இருக்கிறது.வேளச்சேரியில் இருந்து புறப்படும் ரெயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.
இந்தியா- இங்கிலாந்து டி20 கிரிக்கெட்: சென்னை கடற்கரை- வேளச்சேரி ரெயில் சேவையில் மாற்றம்
Published on

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி வருகிற 25-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் பத்திரமாக திரும்பி செல்லும் வகையில் சென்னை கடற்கரை- வேளச்சேரி, வேளச்சேரி- சென்னை கடற்கரை EMU ரெயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படுகிறது.

41086 என்ற ரெயில் வேளச்சேரியில் இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் நிலையத்திற்கு 10.27 நிமிடத்திற்கு வந்தடையும். 10 நிமிடங்கள் சேப்பாக்கம் நிலையத்தில் ரெயில் நிற்கும். பின்னர் 10.37 மணிக்கு புறப்பட்டு செல்லும் 10.52 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

41083 என்ற ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். அதற்குப் பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும். சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு இரவு 22.10 மணிக்கு வந்தடையும். வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.

41085 என் ரெயில் வழக்கமாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும். தற்போது இரவு 10.30 மணிக்கு புறப்படும். சென்னை சேப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு 22.40 மணிக்கு வந்தடையும். இரவு 11.15 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com