

குதிரைபேரம் விவகாரம் தொடர்பாக எம்எல்ஏக்கள் அளித்த புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்? என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக மாட்டுமே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உண்மையை கண்டறிய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற வேண்டியே தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.