சபாநாயகரை சந்தித்து பேசிய ராமதாஸ் தரப்பினர்

சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர். அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
சபாநாயகரை சந்தித்து பேசிய ராமதாஸ் தரப்பினர்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு, அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.

ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com