என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    182-வது தொகுதியாக நாளை மாலை பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
    X

    182-வது தொகுதியாக நாளை மாலை பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

    • தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழக முழுவதும் ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அ.தி.மு.க சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    இதுவரை தமிழக முழுவதும் 181 தொகுதிகளில் அவர் பிரசாரம் முடித்துள்ளார். இந்நிலையில் 182-வது தொகுதியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அந்தப் பகுதியில் தனியாரிடம் 6 ஏக்கர் பரப்பளவில் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை எடப்பாடி பழனிசாமி பேச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்கும் போது அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசி வருகிறார். இதனால் நாளை நடைபெறும் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×