

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பசுமை வழிச்சாலை இபிஎஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவிருந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் இரு தரப்பாக உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.