

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்கள் பற்றி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையானது.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மகளிர் பற்றி சில கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையாகி இருக்கிறதே?
பதில்:-கூட்டத்தில் பேசும்போது தவறான வார்த்தை வந்திருக்கிறது. அந்த தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.
கேள்வி : இனி அதுமாதிரி பேசக்கூடாது என்று நீங்கள் ஏதாவது சொல்லி இருக்கீங்களா?
பதில்:- ஒருவர், தான் சொன்ன கருத்து தவறு என்று உணர்ந்த பிறகு, அதற்கு மன்னிப்பு கோரிய பிறகு அதைப்பற்றி விவாதம் செய்வது பொருத்தமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.