என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

    • தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 3½ ஆண்டுகளில் 3-வது தேர்தலை சந்திக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? இல்லை தி.மு.க. களம் இறங்குமா? என்பது 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்தியிலும் பலத்த கேள்வியாகவே இருந்து வருகிறது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகனான சஞ்சய்க்கு மேல்சபை எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தி.மு.க.வே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதுபற்றி விரைவில் முடிவு எடுத்து போட்டியிடும் வேட்பாளரையும் அறிவிக்க உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான வீரகுமார், ஆற்றல் அசோக் குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருகிறார். நிர்வாகிகளுடன் கலந்து பேசி அ.தி.மு.க. வேட்பாளர் யார்? என்பதை அவர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×