தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முக்கிய அறிவிப்பு

கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முக்கிய அறிவிப்பு
Published on

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களின் தலைமையில் வரும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) நடைபெறவுள்ளது.

அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com