ஒட்டன்சத்திரம் அருகே சவுமிய வருட கல்வெட்டு கண்டுபிடிப்பு

கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது.சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே சவுமிய வருட கல்வெட்டு கண்டுபிடிப்பு
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே கன்னிவாடி போலீஸ் நிலையம் எதிரே உள்ள பெருமாள் கோவிலில் சவுமிய வருட கல்வெட்டு உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஒட்டன்சத்திர அலுவலக ஆய்வாளர்கள் லட்சுமணமூர்த்தி மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த கல்வெட்டு கோவில் காவலுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றி விவரிக்கிறது. கன்னிவாடியில் பெரியகாளி கோவில் காவலுக்கு குமார நரசிம்ம அப்பயன் என்பவரை நியமித்துள்ளனர்.

இதற்கான செலவீனங்களை கொப்பம்மா என்பவர் ஏற்றுள்ளார். சவுமிய வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் இதனை கொடுத்துள்ளார் என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com