"அம்மை" பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தல்

கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
"அம்மை" பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தல்
Published on

சென்னை:

சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் கோடையில் ஏற்படும் நோய்களும் பரவி வருகின்றன. சென்னையில் கோடை வெயில் காரணமாக 'அம்மை' நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதுமே அம்மை நோய் பரவி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 350-க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் 7 பேருக்கு ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கோடை கால அம்மை நோய்கள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகமாக உள்ளது. மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. இது வைரஸ் பரவ சாதகமாக உள்ளது. நோயை தடுப்பதற்கான எளிதான வழி தடுப்பூசி போடுவதுதான். அனைத்து குழந்தைகளுக்கும் டாக்டர்களின் பரிந்துரைப்படி அம்மை நோய்க்கு தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வெடுக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com