

சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகி கொலை தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சண்முகம் கொலை தொடர்பாக 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் லாட்டரி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.