என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஊழல் நோயை ஒழிக்க எங்கள் தலைவர் லேகியம் விற்கிறார்
- தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது.
- தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது.
சேலம்:
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தேசியமும், தெய்வீகமும் இனி இந்த நாட்டுக்கு தேவை என்று நினைக்கிறார்கள். கடவுளுக்கு பயப்படுபவர்கள் தான் நியாயமாக இருக்க முடியும், கடவுளை நம்புகிறவன் நியாயமாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வளவு காலமும் சமூக நீதி, சமுதாய மாற்றம் என்று பேசி அந்தந்த குடும்பத்தினர் தான் வளர்ச்சி பெற்றனர். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதாக கூறினர். ஆனால் அவர்கள் குடும்பத்தை மட்டும் தான் பார்த்து கொண்டார்கள். எங்கேயும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைக்கவில்லை.
பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருக்கும் குடும்பம் வாரிசு அரசியல் செய்யவில்லை. வாரிசுகள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் வாரிசுககள் தலைமைக்கு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வின் திட்டம். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது கட்சியை விட, இயக்கத்தை விட தேசம் தான் முக்கியம் என பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 11-ந் தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 200-வது ஜென்ம ஜென்மத்தில் யாத்திரையில் கலந்து கொள்வதற்காகவும் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவை சந்திக்கவும் மாவட்ட தலைவர்களை சந்திக்கவும் தமிழகம் வருகிறார். பாரத பிரதமர் வருகிற 25-ந் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பல்லடத்திற்கு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு எவ்வளவு உதவி செய்தது என்று அவர் முதலமைச்சராக இருந்த போதும் எதிர்கட்சி தலைவராக இருந்த போது கூறி உள்ளார். அவர் கேட்ட போதெல்லாம் மத்திய அரசு நிதி கொடுத்தது. இதனை சட்டமன்றம் மற்றும் வெளியிலும் அவர் சொல்லி உள்ளார். எங்கள் இயக்கத்தால் அவர் பயன்பெற்றுள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை போல லாவனி கச்சோரி நடத்த நாங்கள் தயாராக இல்லை.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு,
உடல் நலம் சரியில்லை என்றால் லேகியம் வாங்குவார்கள், நோய் பிடித்தவர்கள், ஊழல் வாதிகளை திருத்துவதற்கும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களை திருத்துவதற்கும் அவர் லேகியம் விற்கிறார். அந்த நோய் தமிழகத்தில் வேகமாக வளர்ந்திருக்கிறது, அரசை நடத்துபவர்கள் மத்தியில் அந்த நோய் இருக்கிறது. அந்த நோயை தீர்க்க எங்கள் தலைவர் லேகியம் விற்பது உண்மை தான், ஊழல் நோயை ஒழிக்க அதனை வேரறுக்க லேகியம் விற்கிறார்.
தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது. ஆனால் உள்ளூர பயந்து தான் உள்ளனர். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளது. 95 சதவீத மக்கள் பா.ஜ.க.வுக்கு அதரவாக உள்ளனர். கருத்து கணிப்புகளை விட மக்கள் மன நிலையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்