என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்- கனிமொழி
- இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்.
- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்களித்த பிறகு நிருபர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது:-
இது நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அரசியல் சாசனத்தை சட்டத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல் என்ற அந்த தெளிவோடு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த உணர்வோடு இந்த புரிதலோடு நாம் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி:- முதலமைச்சர் சொன்னது போல் 40-க்கு 40 வெற்றிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது? பிரகாசமாக இருக்கிறதா?
பதில்:- நிச்சயமாக தமிழ்நாட்டில் 39 இடங்களிலும், புதுவையிலும் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
கேள்வி:- மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எப்படி உள்ளது?
பதில்:- எல்லா இடங்களிலும் சீக்கிரம் ஓட்டுப்போட வேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் தூத்துக்குடி செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை பிறகு சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்