search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு... எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.
    • அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

    சென்னை:

    திருவொற்றியூர் பகுதியில் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * அரசின் மெத்தன போக்கால் வெள்ள பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

    * மக்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை.

    * தி.மு.க அரசு மழை பாதிப்பு, பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை.

    * ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என தமிழக அரசு சொன்னது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் போது மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டோம்.

    * அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் எடுத்தோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ள நீர் தடுப்பு நடவடிக்கையாக 3 திட்டங்கள் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×