என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
- மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட பாவடி தோப்பு திடல், சிவகாசியிலும் இரவு 7 மணிக்கு ஜெயம் தியேட்டர் அருகில் பழங்காநத்தம் மதுரையிலும் பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






