search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது: எடப்பாடி பழனிசாமி
    X

    தேர்தல் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது: எடப்பாடி பழனிசாமி

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
    • அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.

    * ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.

    * கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பது தான் நோக்கம்.

    * தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    * அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

    * தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.

    * அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

    * அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.

    Next Story
    ×