உ.பி.யில் சோகம்: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி

மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உ.பி.யில் சோகம்: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் பலி
Published on

உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 20க்கும் அதிகமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com