பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?: ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி

மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம்.பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன்.
பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?: ஜெகதீஷ் ஷெட்டர் கேள்வி
Published on

பெங்களூரு

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட பா.ஜனதா வாய்ப்பளிக்காததால் அவர் காங்கிரசில் சேர்ந்திருந்தார். 6 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்ததாலும், வயதாகி விட்டதாலும், தேர்தல் அரசியலில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டரை ஓய்வு பெறும்படி பா.ஜனதா தலைவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதுபோன்ற காரணங்களால் தான் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகினார். இந்த விவகாரம் குறித்து உப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் ஆதரவு இருக்கும் வரை ஒருவர் அரசியலில் தொடர்ந்து இருக்கலாம். மக்களின் ஆசீர்வாதம் இருக்கும் போது அரசியலில் தொடர்ந்து இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் நான் மந்திரி பதவி வேண்டாம் என்று கூறினேன். இது எனது அரசியல் அனுபவம், முதிர்ச்சிக்காக எடுத்த முடிவாகும்.

இடஒதுக்கீடு விவகாரத்தில் மக்களிடம் பொய் சொன்ன ஒரே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவார். என்னை அரசியலில் இருந்து ஓய்வு பெற பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். பிரதமர் மோடி 4 முறை முதல்-மந்திரியாகவும், 2 முறை பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?. பிரகலாத் ஜோஷி 4 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளதால், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com