திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம்- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம்- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது.

காலை 6 மணிக்கு ஏழுமலையான், விஸ்வகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தன. மூலவர் ஏழுமலையான் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து காலை 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் 4 மாட வீதிகள் மற்றும் கொடி மரத்தை சுற்றி உலா நடந்தது.

ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் குவிந்தனர். கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தங்க மண்டபத்தில் யுகாதி ஆஸ்தானம் அறிவியல் பூர்வமாக நடந்தன.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

திருப்பதியில் நேற்று 61,920 பேர் தரிசனம் செய்தனர். 17,638 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com