பாலியல் குற்றவாளி: ஆயுள் தண்டனை கைதியான சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு மீண்டும் பரோல்

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹிமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி: ஆயுள் தண்டனை கைதியான சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு மீண்டும் பரோல்
Published on

அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அடிக்கடி பரோலில் குர்மீத் ராம் ரஹீம் விடுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் குர்மீத் ராம் ரஹீமூக்கு அரியானா அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அவருக்கு இது 3வது பரோல் ஆகும். தண்டனை பெற்ற 2020ம் ஆண்டு முதல் அவர் 14வது முறையாக பரோல் விடுப்பு (344 நாட்கள்) பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com