டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் கனமழை

டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் மழைகனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியது
டெல்லியில் இன்று காலை பல்வேறு இடங்களில் கனமழை
Published on

தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவின் வடமாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்தததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியான நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடியதால், டெல்லி நகருக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அதன்பின் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் பெரும்பாலன இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. பதார்புர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வெள்ளம் சாலையில் தேங்கியது. வசந்த் விஹார் பகுதியிலும் மழை வெள்ளம் சாலையில் ஓடியது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com