search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாசலில் கனமழை எதிரொலி - மாண்டியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
    X

    இமாசலில் கனமழை எதிரொலி - மாண்டியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    • இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் மாண்டி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சிம்லா:

    வட மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று காலை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் லஹால் மற்றும் ஸ்பிடி நகரில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து தடைபட்டது.

    ஸ்பிடியில் இருந்து மணாலி நோக்கிச் சென்ற கல்லூரி மாணவர்கள் 30 பேர் நடுவழியில் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    அங்குள்ள மாண்டி மாவட்டத்தின் ரியாஸ் ஆற்றில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாண்டி நகர துணை காவல் ஆணையாளர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்தார்.

    Next Story
    ×