ஒவ்வொரு வழக்கிற்கும் தனி விசாரணைக் குழு- பூங்குழலி ஐ.பி.எஸ்

எர்ணாகுளத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவாகியுள்ளன.ஒவ்வொரு அதிகாரிக்கும் வழக்கின் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழக்கிற்கும் தனி விசாரணைக் குழு- பூங்குழலி ஐ.பி.எஸ்
Published on

கேரள நடிகர்கள் மீது நடிகைகள் முன்வைத்த பாலியல் புகார் தொடர்பாக ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்யும் என பூங்குழலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பூங்குழலி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, ஜெயசூர்யா, இடைவேளபாபு, பாபு ராஜ், மணியன்பிற்ளை ராஜூ, சந்திரசேகரன், முகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு அதிகாரிக்கும் வழக்கின் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரகசிய அறிக்கையை பதிவு செய்வது குறித்து தற்போது எந்த கருத்தும் இல்லை எனவும் பூங்குழலி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com