search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய வடிவிலான உண்டியல்கள் அமைப்பு
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய வடிவிலான உண்டியல்கள் அமைப்பு

    • உண்டியல்களில் 3 பக்கமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்போது பித்தளையால் செய்யப்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.

    பழைய உண்டியல்களில் உள்ள சிரமத்தை போக்கும் வகையில் தற்போது சில்வர் உலோகத்தால் செய்யப்பட்ட புதிய வடிவிலான 5 உண்டியல்கள் ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இந்த உண்டியல்களில் 3 பக்கமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதாக சிரமம் இன்றி நகர்த்திச் செல்ல முடியும்.

    உண்டியலுக்குள் கையை விட்டு பணத்தை திருட முடியாதபடி இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் லிப்ட்டில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சில உண்டியல்களை கொண்டு வர உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,115 பேர் தரிசனம் செய்தனர். 38,243 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×