மாட்டுக்கறி கொழுப்பு சர்ச்சை.. 4 நாட்களில் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனை

லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.தினமும் சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.
14 Lakh Tirupati Laddoos Sold In 4 Days
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.

லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி செல்கின்றனர். லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை சுமார் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 19 அன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20 அன்று 3.17 லட்சமும், செப்டம்பர் 21 அன்று 3.67 லட்சமும், செப்டம்பர் 22 அன்று 3.60 லட்சமும் விற்பனையாகியுள்ளன. தினமும் சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com