search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் பிறந்தநாளையொட்டி ஏழைகள்-மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி: கனிமொழி எம்.பி. வழங்குகிறார்
    X

    காமராஜர் பிறந்தநாளையொட்டி ஏழைகள்-மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி: கனிமொழி எம்.பி. வழங்குகிறார்

    • காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.
    • விழாவில் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    போரூர்:

    கோயம்பேடு, மதுரவாயல் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கோயம்பேடு மார்கெட்டில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சங்க கவுரவ தலைவர்கள் எல்.சி.ராஜேந்திரன், பெப்சி வி.எஸ்.பாலமுரளி ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். சங்க தலைவர் எல்.கே.என் ராஜா நாடார், மார்கெட் ஜெ.முத்து, பழக்கடை டி.கனகராஜ், மு.வைகுண்ட ராஜா, ஜெ.பால்ராஜ், வ.பெ.ரா.பால்பாண்டியன், கே.முத்துராமன், செ.துரைமாணிக்கம், தங்கம் ஏ.ராமச்சந்திரன், பி.ராஜேஷ் பாண்டியன், பி.கருணாநிதி, ஆர்.எஸ்.பாண்டியன், ஆர்.அழகுநிதி, எஸ்.ஜவகர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சங்க செயலாளர் ரஸ்னா என்.ராமசந்திரன் வரவேற்றுப் பேசுகிறார்.

    விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு 1521 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஏழை பெண்களுக்கு புடவை உள்ளிட்ட பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர் தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பிரபாகர ராஜா எம். எல். ஏ. , தமிழ் நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண் குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ், இந்திய நாடார் பேரவை தலைவர் ராகம் சவுந்திரபாண்டியன், காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் மின்னல் அந்தோணி, நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம். கார்த்திகேயன், கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.டி. ராஜசேகரன், பல்வேறு நாடார் சங்கங்கள் மற்றும் வியாபாரி சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கோயம்பேடு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    முடிவில் எஸ்.செல்வகுமார் நாடார் நன்றி கூறுகிறார். விழாவுக்கு வரும் அனைவரையும் சிறு மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகளான எஸ். எஸ். முத்துக்குமார், சி.பி.ரமேஷ், ஆர்.ரத்தினசாமி, ஏ.செல்வ குமார், எஸ்.ஆர்.சி. ரமேஷ் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

    Next Story
    ×