search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    ‘ஒமிக்ரான்’ அச்சுறுத்தலுக்கு இடையில் 13-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

    இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் வைரஸ் என்ற வடிவில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தடுப்பூசி ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

    நாளை (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. மொத்தம் 60 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சென்னையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 10 லட்சத்து 39 ஆயிரத்து 704 பேர் 2-ம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 11 லட்சத்து 83 ஆயிரத்து 905 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    தற்போது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது இன்றியமையாதது ஆகும்.

    சென்னை மாநகராட்சி

    நாளை (சனிக்கிழமை) பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600 முகாம்களுடன் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடத்தப்பட உள்ளன.

    எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் http://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp. என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.


    இதையும் படியுங்கள்...வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம்- தமிழக அரசு உத்தரவு
    Next Story
    ×