ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஜோடி

சமீபத்தில் தன் படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனியை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளார்.
நிரஞ்சனி, தேசிங்கு பெரியசாமி
நிரஞ்சனி, தேசிங்கு பெரியசாமி
Published on

பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 

நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்கள். மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com