பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட மதனின் ஜாமீன் மனுவை சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு, இந்த வழக்கில் மதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். பின்னர் அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருள்முருகன், சிறையில் இருந்து வரும் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com