நான் எடுத்த தவறான முடிவு அதுதான் - மீரா வாசுதேவன்

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
Published on

தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-

“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில் நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com