40 வயதிலும் ஹீரோயினாகதான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகை

40 வயதிலும் ஹீரோயினாகதான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் நடிகை
Published on

வெள்ளாவியில் வைத்து வெளுத்தது போன்று இருக்கும் மூன்றெழுத்து நடிகை ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தாராம். பின்னர் வயதாக, வயதாக பட வாய்ப்புகள் குறையவே நடிகை கவர்ச்சியில் களமிறங்க ஆரம்பித்தாராம். பல இயக்குனர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினாலும் நான் ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாராம்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அவ்வப்போது ரசிகர்களை காண நேரலையில் வருகிறாராம். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் 40 வயதிலும் ஹீரோயினாக நடிக்கும் அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்களாம். இதனால் குஷியான நடிகை நடித்தால் ஹீரோயின் தான் இல்லையென்றால் எனக்கு வாய்ப்பே தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம்.

X

Maalai Malar
www.maalaimalar.com