உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஆம்பியர் எலெக்ட்ரிக்

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழக ஆலை உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது. தமிழகத்தில் ஆம்பியர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
உற்பத்தியில் புது மைல்கல் எட்டிய ஆம்பியர் எலெக்ட்ரிக்
Published on

கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டு தமிழகத்தின் ராணிபேட்டை ஆலை உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. ராணிபேட்டை உற்பத்தி ஆலை பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்கியது. ஆலை பணிகள் துவங்கிய ஏழு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.

"எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்களின் தொடர்ந்து மாறி வருவது, எலெக்ட்ரி்க் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போன்ற காரணங்களால் தான் இந்த மைல்கல் சாத்தியமானது," என ஆம்பியர் பிராண்டு தெரிவித்து உள்ளது.

எங்களது பணியாளர்களின் திறமை மீது பெருமை கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி இந்த மைல்கல் சாத்தியமாகி இருக்காது. ராணிப்பேட்டை உற்பத்தி ஆலையில் பெரும்பாலான பணியாளர்கள் பெண் ஊழியர்கள் ஆவர். இங்கு பணியாற்றுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் என கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் பெல் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com