search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயக்குமார் தோட்ட கிணற்றில் கைப்பற்றப்பட்ட கத்தி
    X

    ஜெயக்குமார் தோட்ட கிணற்றில் கைப்பற்றப்பட்ட கத்தி

    • கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக போலீசார் கூடுதல் தடயங்களை தேடுவதற்காக அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

    கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×