search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைப்பு
    X

    பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைப்பு

    • பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
    • கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழகத்தில் அனுமதிக்கின்றனர்.

    தொற்று பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-

    பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.

    பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழி கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.

    நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழி பண்ணைகளில் 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகள் புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம்.

    நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×