டென்னிஸ்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா

Published On 2024-04-30 00:58 GMT   |   Update On 2024-04-30 00:58 GMT
  • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
  • இதில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

மேட்ரிட்:

மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை சாரா டோர்மாவை எதிர்கொண்டார்.

இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை சாரா பிஜ்லெக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News