உலகம்

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 6 பேர் பலி: 35 பேர் காயம்

Published On 2024-05-06 12:28 GMT   |   Update On 2024-05-06 12:28 GMT
  • ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் சென்ற வாகனங்கள் மீது டிரோன் தாக்குதல்.
  • இரண்டு குழந்தைகள் லேசாக காயத்துடன் உயிர் தப்பினர்.

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றன.

இன்று காலை உக்ரைன் ரஷியாவுடனான எல்லையில் உள்ள பெல்கோரோட் மகாணத்தில் உள்ள பகுதி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என அந்த மாகாண கவர்னர் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

பெல்கோரோட் மாகாணத்தில் உள்ள பொரிசோவ்ஸ்கி மாவட்டம் பெரேசோவ்கா கிராமம் அருகே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் இரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அருகே கார் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அதன்மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்கியது.

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News