தமிழ்நாடு

மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்

Published On 2024-05-07 12:24 GMT   |   Update On 2024-05-07 12:37 GMT
  • திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.
  • பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

சென்னை:

பேருந்தின் மேற்கூரையில் ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வபோது போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புவது வழக்கம்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே திருவிக நகர்-விவேகானந்தர் இல்லம் மாநகர பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்.

பின்னர் அவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து இறங்க கண்ணாடியை தட்டி, பேருந்தை நிறுத்தினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News