தமிழ்நாடு

பிளஸ்-2 தேர்வில் வென்ற திருநங்கை நிவேதா

Published On 2024-05-06 09:30 GMT   |   Update On 2024-05-06 09:30 GMT
  • பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார்.
  • நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283. தமிழகத்தில் தேர்வு எழுதியதும் அவர் ஒருவர்தான்.

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார். எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையும். அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.

Tags:    

Similar News