இந்தியா

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு பெற்றது

Published On 2024-05-05 12:25 GMT   |   Update On 2024-05-05 12:25 GMT
  • நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்
  • தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.

அயல்நாடுகள் உள்ளிட்ட நாடு முழுவதும் 557 நகரங்களில் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 ½ லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

Tags:    

Similar News