அழகுக் குறிப்புகள்

டிரெண்டாகி வரும் `100 முறை வாஷ் செய்த நெய்'

Published On 2024-02-20 09:10 GMT   |   Update On 2024-02-20 09:10 GMT
  • 100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்' ரொம்பவே டிரெண்டாகி வருகிறது.
  • குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கி இருப்பதை பார்க்கிறோம்.

சமீபகாலமாக `100 முறை வாஷ் செய்த நெய்' மற்றும் `100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்' ரொம்பவே டிரெண்டாகி வருகிறது. நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கி இருப்பதை பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே... அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

சருமத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் எவ்வளவு முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அதனால் மார்க்கெட்டுகளில் விதவிதமான மாய்ஸ்ச்சரைசர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவை நிரந்தரமான பயன்களைத் தருவதில்லை.. அப்ளை செய்யும்போது மட்டும் சருமம் ஹைட்ரேட்டிங்காக இருக்கிறது. சிறிது நேரத்திலேயே வறட்சி அடைந்து விடுகிறது. ஆனால் நெய் அப்படியல்ல. சருமத்தை நாள் முழுமைக்கும் மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.

தேவையான பொருள்கள்

நெய் - 100 கிராம்,

தண்ணீர் - 1 கப்,

மஞ்சிஸ்டா பொடி - 1 ஸ்பூன்,

அதிமதுரம் - 1 ஸ்பூன்,

துளசி பொடி - கால் பூன்,

செம்பு தாம்பலம் - 1

செம்பு டம்ளர் - 1

செய்முறை:

* செம்பு தாம்பலத்தைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சிஸ்டா பொடி, அதிமதுரப் பொடி, துளசி பொடி மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* செம்மு தாம்பலத்தில் நெய்யை ஊற்றிக் கொண்டு, கலந்து வைத்திருக்கும் நீரில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து நெய்யில் விட்டு, செம்பு டம்ளரைக் கொண்டு வட்ட வடிவில் நன்குதேய்க்க வேண்டும்.

 * ஊற்றிய தண்ணீரை நெய் முழுவதும் உறிஞ்சிக் கொண்ட பிறது அடுத்த ஸ்பூன் தண்ணணீரை ஊற்றித் தேய்க்க வேண்டும். இப்படி தொடர்ந்து 100 முறை நெய்யை அந்த தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். 100 முறை கழுவி எடுத்த பின், ஸ்மூத்தான மாயஸ்சரைஸர் கிரீம் கிடைக்கும்.

நெய் முழுசாக கிரீமாக மாறியிருக்கும். இதுதான் நெய்யை 100 முறை கழுவினால் கிடைக்கும். இது ஆயிரங்காலத்து பழமையான மாயஸ்ச்சரைஸர்.

100 முறை கழுவி எடுத்த நெய் கிரீமை சருமத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தை நன்கு ஹைட்ரேட்டிங்காக வைத்துக் கொள்ளும். சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

 குறிப்பாக இதிலுள்ள ஒமேகா 3, ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ, கே ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தை இளமையாக வைத்திருக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும்.

இந்த கிரீமை பகல் நேர கிரீமாகவும் பயன்படுத்தலாம். இரவு நேர கிரீமாகவும் பயன்படுத்தலாம். சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும்.

பருக்களோ பரு வந்த தழும்போ, சன் பர்ன், கரும்புள்ளி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு, இந்த கிரீமை அப்ளை செய்யலாம். அதிலும் இரவு நேரத்தில் இந்த க்ரீமை அப்ளை செய்து மசாஜ் செய்து வர, எல்லா சருமப் பிரச்சினைகளும் தீரும்.

Tags:    

Similar News